Tuesday, March 24, 2009

தமிழினத்தவர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றல் தடைசெய்யப்பட்டது

கடந்த 2007ம் ஆண்டு ஆனி மாதம் 7ம் திகதியன்று கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்கள் எவ்வித காரணமும் கூறாமல் மீண்டும் வவுனியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் பாதுகாப்புத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனி மாதம் 7ம் திகதி பொழுது விடிவதற்கும் முன்பாக ஏற்கனவே தயார்படுத்தப்பட்ட பஸ்வண்டிகளுடன் லொட்ஜ்களைநோக்கி வந்திறங்கிய பாதுகாப்புப்படையினர், தமிழினத்தவர்களுக்கு சொந்தமான லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழினத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்புத்தரப்பினரால் கொண்டுவரப்பட்ட பஸ்வண்டிகளில் ஏறுவதற்கு வழங்கிய நேரம் 30 நிமிடங்கள் மாத்திரமே. இவர்கள் மத்தியில் இருதய நோயாளிகள், மற்றும் பல்வேறு நோய்நொடிகளினால் பீடிக்கப்பட்டு மருத்துவத்தேவைக்காக வந்திருந்தவர்களும், கொலை அச்சுறுத்தல்களினால் தப்பியோடிவந்து மறைந்திருந்தவர்கள், ஓரிருநாட்களில் தமது திருமணத்திற்காக மணமகனை எதிர்பார்த்துக் காத்திருந்த பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 300ற்கும் மேற்பட்டதாக இருந்தது. இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஓரிருதினங்களுக்குமுன் அதாவது ஆனி மாதம் 1ம் திகதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ்மாஅதிபர் கூறியதாவது, எவ்விதகாரணமுமின்றி கொழும்பில் தமிழினத்தவர்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கக்கூடாதென்பதாகும். இவ்வாறு எவ்விதகாரணமுமின்றி அல்லது எதுவும் கூறாமல் தமிழினத்தவர்களை மிகவுங்குறுகிய ஒரு நேரத்தினுள்

No comments: