Tuesday, March 24, 2009

நாங்கள் அறியாத செஷ் (CHESS)

உங்களது பேச்சு பேச்சாற்றலில் சரியாக இருந்தாலும் அது உலகநியதியல்ல. தற்பொழுது அரசு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கென நேர்மையாகச் செயற்படுகின்றது. இதற்கிடையில் மனிதஉரிமை தொடர்பாக பேசும்போது ஏற்படுவது என்னவெனில் தீவிரவாதத்தை தோற்கடிப்பது மந்தநிலைக்கு செல்வதாகும். மேற்குறிப்பிட்ட பதில் எனக்குக் கிடைத்தது இரண்டு வாரங்களுக்குமுன் க…….. நகரில் இடம்பெற்ற மனிதஉரிமை தொடர்பான கலந்துரையாடலின் போதாகும்.

ஆயுதந்தாங்கிய குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, மனிதஉரிமை மீறல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பான கேள்வி அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது. கொலைகள், காணாமற்போதல்கள், கடத்தப்படல், சிறார்களை போரிலீடுபடுத்துதல், சித்திரவதைசெய்தல், சிவில் சமூகத்தினருக்கெதிராக யுத்தத்தாக்குதல்கள் உட்பட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் ஏதாவதொரு ஏற்பாட்டை மேற்கொள்ள பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் நிறுவனம் முன்வரவில்லையென்பதுடன், எவ்வித தண்டனையும் வழங்கப்படாமல் பயமில்லாமல் விரும்பியபடி குற்றச்செயல்கள் செய்வதற்கான வழிவகைகள் தோன்றியுள்ளதுடன், தேசிய மனிதஉரிமை ஆணைக்குழு தமக்கு சட்டரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாத நிலையொன்று தோன்றியுள்ளதாக குறிப்பிட்ட நான், எல்.ரி.ரி.ஈயினரின் கட்டுப்பாட்டு பிரதேசமுட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் இடம்பெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்வதற்கும், அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அதிகாரமுடைய சர்வதேச மனிதஉரிமை செயற்திட்டமாகிய

No comments: