Wednesday, March 25, 2009

பயங்கரவாதமும் பயங்கரவாதியும்: வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லிற்கு (ஆக)

எனக்குத்தெரிந்த ஒரு நபர் ‘புபே’ (Buffet) என்ற சொல்லிற்குரிய கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார். “விரும்பியளவிற்குப் பகிர்ந்துண்ணுங்கள்”. உண்மையும் இதுதான் ‘புபே’ என்ற பிரெஞ்சுச் (French) சொல் இலங்கையில் புளக்கத்திற்கு வந்ததும் புகையிரத நிலையங்களில் காணப்பட்ட ‘புபே’ அனைத்தும் பவட் ஆகமாறியது. இதன்பின் உணவகங்களிலும், திருமண இல்லங்களிலும் ‘புபே’ பழக்கத்திற்கு வர ஆரம்பித்தது. இருப்பினும் இச்சொல்லுக்குரிய சரியான மொழிபெயர்ப்பை சிங்களமொழியில் கொடுக்கக்கூடிய ஒருவர் இலங்கைப் பிரஜையாகிய சபாநாயகர் மாத்திரமே.

இதேபோன்றுதான் எமது மொழியுடன் சேர்ந்த இன்னுமொரு சொல் Terrorism மாகும். இது ஒரு லத்தீன் சொல்லாகும், பின் இது ஆங்கிலத்துடன் கலந்து எம்மிடம் புழக்கத்தில் வந்தவுடன் நாம் இதனை பயங்கரவாதமென்று அழைத்தோம். (Terror- பயங்கர, ism- வாதி Terrorism- பயங்கரவாதி) ‘புபே’ என்பதைப்போல் பயங்கரவாதத்தையும் தெளிவுபடுத்துவது மிகவும் கடினமான ஒரு செயலாகும். பயங்கரவாதத்தை விளக்க ஒரு வரைவிலக்கணம் இல்லை. இதனால் இக்கடிதத்தைப் படிப்பவர் இவ்வாறு இதைக் குறிப்பிடுவர், “மடையர்களே சற்று உங்களை சூளவுள்ள நிலையினை அவதானியுங்கள், எமது நாட்டில் மாத்திரமல்ல, எமது இன்பத்திலும் துன்பத்திலும் எமக்குத் துணைநிற்கும் பாகிஸ்தானைக்கூட பயங்கரவாதம் அழித்துள்ளது. இதனால் இன்னமும் இதற்கென்று தனி விளக்கமும் வேண்டுமா? பயங்கரவாதமென்பது பயங்கரவாதம்தான்.”

No comments: