Tuesday, October 28, 2008

சிங்கத்தின் வாயிலுள்ள மணங்களைப்பற்றி முயலிடம் கேட்பதைப்போல

ஒரேயொரு ஊரில் காட்டில் ராஜாவாக சிங்கம் தெரிவுசெய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும் காட்டில் அரசன் சிங்கமென்பதால் இதனை பழையகதையென்று நீங்கள் எண்ணக்கூடும். இருப்பினும் இந்த சிங்கம் வழமையாகவே மீருகங்களைக் கொன்று பச்சையாக உண்டுவிட்டபின் தமக்குக்கீழுள்ள பொதுமக்களிடம் தனது வாயின் துர்நாற்றத்தைப் பற்றி விசாரிப்பது வழமையாகவே இருந்தது. ஒரு நாள் சிங்கம் இக்கேள்வியை முயலிடம் கேட்டது முயல் முகங்கொடுத்த நிலைமை பரிதாபமாக இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்து துர்நாற்றமெழுவதாகக் கூறினால் சிங்கத்தை ஏழனஞ் செய்வதாகப்போய்விடும், இதனால் முயலிற்கு மரணதண்டனை வழங்கப்படும். சிங்கத்தின் வாய் நறுமணமுள்ளததெனக் கூறினால் பொய்கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரணம் சம்பவிக்கப்படும். இதனால் முயல் தன்னை காப்பாற்றிக்கொள்ள கூறியவிடயமென்னவெனில் தற்பொழுது தடிமல் இருப்பதால் மணங்குணந் தெரியாமலுள்ளது எனக்கூறி தன்னை காப்பாற்றிக்கொண்டது.

Read more....

வடக்கில் கிளைமோர் வைக்கும் சுமணசிறி தம்பியும் கிழக்கில் தற்கொலை செய்துகொள்ளும் செல்லம்மா தம்பியும்

மன்னாரில் வசிக்கும் இளம் பெண்களின் வாழ்க்கைகழிவது யுத்தத்தின் மத்தியிலும் வாழ்வது பாதுகாப்பற்ற நிலையிலுமாகும். அவளது கடின வாழ்க்கைக்கோலம் புத்தளத்தில் வசிக்கும் இளைஞனுக்கு புரியாத ஒரு புதிராகும். வேறுவிதமாகக் கூறினால் வடக்கில் தங்கை செல்லம்மா படும் அவதியினை கிழக்கிலிருக்கும் தம்பி சுமணசிறிக்குப் புரியாது.

இதனை செயற்படுத்துவதற்கான செயற்திட்டத்தை சாதாரணமாக மூன்று டிரக் இன் கீழ் அடக்குவர்.

பாதிக்கப்பட்டவர்

‘பெயரைச் சொல்லுங்கள்.‘
‘படாசாரா‘
‘முழுப்பெயர்?‘
‘படாசாரா தம்பிமுத்து‘
‘என்ன நடந்தது?‘
‘என்னுடைய மகனை சுட்டுக்கொன்றுவிட்டார்கள்’
‘யார் செய்தார்கள்?‘
‘…………………‘
‘யார் சுட்டார்கள்?
‘மகனது குழந்தைகள் மூவரையும் நான்தான் பராமரித்து வருகின்றேன்.ஏன்னையும் கொன்று விடுவார்கள்..’
‘நான் கேட்பது சுட்டவர்களைக் கண்டீர்களா?’
‘ஆம்’

Read more.....

Wednesday, October 8, 2008

எல்லா குற்றங்களுக்கும் மரணம்தான் தண்டனை

7ம் நூற்றாண்டில் ட்ரக்கோ என்பவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின்கீழ் எல்லா குற்றங்களுக்குமான தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அலைந்து திரிதல், மரக்கறி, பழங்களை களவாடுதல் போன்றவற்றுடன் கொலை செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்பொழுது சிறுகுற்றங்களுக்கும் பாரியகுற்றங்களுக்கும் மரணதண்டனை விதிப்பது பாரபட்சம் என்ற கருத்து எழுந்தபோது ட்ரக்கோ அதற்கு இவ்வாறு விளக்கமளித்தார்.
ட்ரக்கோ கூறிய விதம்

“சிறுகுற்றங்களுக்கும் மரணதண்டனையே உகந்தது. பாரிய குற்றங்களுக்கு மரணதண்டனையைவிட மேலான தண்டனை இல்லாதபடியினால் அக்குற்றங்களுக்கும் மரணதண்டனையே அங்கீகரிக்கின்றேன்”

டேய் நாங்களும் மனிதர்கள்தான்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது அவரது பிரதான கொள்ளை அடிமைத்தனத்தை ஒழிப்பதாகும். இலிங்கனின் எதிர்த்தரப்பு நீதியரசராக இருந்தவர் டக்லஸ் என்பவராவார். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக செயற்பட்ட இலிங்கனின் கருத்துக்கு இவர் எதிர்ப்பாக இருந்தார்.

அடிமைத்தனத்தின் பௌதீக தோற்றம்

எண்ணக்கருஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களுள் பலர் அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்த விவசாய நிலங்களில் வேலைசெய்வதற்காக விவசாயிகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்வதென்பது கிழக்கமெரிக்காவின் பாரிய விவசாய நிலங்கள் அதன் வாழ்வாதாரங்களை இழப்பதென்பதாகும். இதற்கப்பால் அம்மக்கள் சுதந்திரக்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டதுடன் கிழக்குப்பிராந்தியத்தில் பொதுமக்களின் தராதரத்தில் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த விடயமென்னவெனில் சுதந்திர ஆபிரிக்காவின் அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலேற்பட்ட வளர்ச்சியாகும். இது அடிமைத்தனத்தினை மேலும் மேலோங்கச்செய்தது.

மனிதஉரிமை பாதுகாவலர்கள் சிவில் பாதுகாவலர்களாதல்

மனிதஉரிமை செயற்திட்டத்தின்போது சந்தித்த பிரதேசரீதியிலான மனிதஉரிமை செயற்பாட்டின் குழு என்னிடம் கூறியதாவது அவர்கள் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு சபையில் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனரெனக் கூறினார்.

பொலிஸ் அதிகாரிகள் தங்களது கிராமத்திற்கு வந்து சிவில் பாதுகாப்பு செயற்குழுவில் தங்களையும் இணையுமாறு அவர்களிடம் கேட்டுள்ளனர். “நீங்களில்லாவிடில் பொலிஸ் பாதுகாப்பற்ற நிலையிலிருக்குமென்று பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். யுத்தப்பிரதேசங்களில் சேவையாற்றுவதற்காக அலுவலர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பொலிஸில் தற்போது சேவையாற்றுபவர்கள் தேவையானளவில் அதாவது 100ற்கு 25 வீதமானோர் மாத்திரமாகும்.

மீன் பிடிக்கும் குசல்ஹாமிக்கு கவுன்சிலின் நுழைவாயிலை முடிவிடவும்

மனிதஉரிமைகள் கவுன்சிலின் உறுப்புரிமைபெறும் அரசுகளைத் தெரிவுசெய்யும் தேர்தல் வைகாசி மாதம் 21ம் திகதி நியுயோர்க் நகரில் ஐக்கியநாடுகளின் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 47 ஆகும். அதில் உறுப்புரிமை பெறுவதாயின் ஒரு நாடு குறைந்தபட்சமேனும் 96 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். 2006ம் ஆண்டு தொடக்கம் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக இருந்ததுடன் அதன் உபதலைவராகவும் பணியாற்றியது.

வைகாசி மாதத்தில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தலின்போது உறுப்புரிமைநாடு தெரிவுசெய்யப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிருந்தது. இருப்பினும் இலங்கை உறுப்புரிமை நாடாக கடந்த இரண்டு வருடங்கள் தொழிற்பட்டது. இதன்போது எல்லா இனத்தவரும் மனிதஉரிமைகள் தொடர்ந்தேர்ச்சியாக மிகவும் பாரதூரமானவகையில் மீறப்பட்டதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

Read more......

ஐஐஜிஈபி முறையினை வேருடன் அழித்தல்

சர்வதேச சுயாதீன மாண்புமிகுக் குழுவாக அழைக்கப்பட்ட ஐஐஜிஈபி குழு கடந்த காலத்தில் தமது கடமைகளை இடைநடுவே நிறுத்திவிட்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பியது. அவ்வாறு நாடுதிரும்புவதற்கு முன்பாக கொழும்பில் இடம்பெற்றசெய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்கள் அவர்களது இறுதி அறிக்கையை வெளியிட்டவேளையில் கூறியிருந்ததாவது மனிதஉரிமைகள் மீறப்படுவது தொடர்பான உண்மை நிலையினை ஆராயவேண்டிய நிலைமை இலங்கையின் அரசிற்கு அரசியல் ரீதியில் தேசைப்பாடு இல்லையென்பதாகும். இச்செய்தியாளர் மாநாட்டின்போதும் அறிக்கையொன்றினை வெளியிட்டபின்பும் இந்த சுயாதீன மாண்புமிக்கவர்களுக்கெதிராக பல “சண்டித்தனங்கள்” முன்வைக்கப்பட்டது.

கெட்டவர்களுக்கெதிராவதன் சவால்


ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை கவுன்சிலின் 7ஆவது அமர்வு கடந்த வாரம் ஜெனிவாவில் முடிவுற்றது. முன்னைய நேரஅட்டவணையின் பிரகாரம் மார்ச் 28ஆவது நாள் முடிவுறவேண்டியிருந்து பின் இன்னுமொரு அரைவாசி நாளுக்காக அமர்வு நீடிக்கப்பட்டது. ஜக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் வாரிசாக கிடைத்த மனிதஉரிமை கவுன்சில் இன்னும் அதன் இளமைப் பருவத்திலுள்ளது. இதனால் இம்முறை அமர்வின்போது கூடிய கவனம் மனிதஉரிமை கவுன்சிலின் வளர்ச்சியிலும் மனிதஉரிமை தொடர்பில் உயர்தானிகர் அலுவலகத்திற்கும் கவுன்சிலுக்குமான தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பன கலந்துரையாடப்பட்டது. (மனிதஉரிமை உயர்தானிகர் பதவி ஐக்கிய நாட்டு உயர்செயலாளரினால் நியமிக்கப்படுவதுடன் கவுன்சில் உயர்சபையின் கீழியங்கும் ஒரு நிறுவனமுமாகும்) கவுன்சில் இறுதியாக யாருக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை.

மனிதஉரிமையினைப் பாதுகாத்தல் தொடர்பில் சர்வதேச வேலைத்திட்டம்


ஒரு நாட்டினுள் மனிதஉரிமையுடன் தொடர்புடைய பாரிய பிரச்சனைகள் உருவாகுவதும் பின்பு அவை மறைந்து போவதுமாக இருக்கும். இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலிருக்கும் முக்கியமான எண்ணக்கரு என்னவென்றால் சர்வதேச மனிதஉரிமை பிரிவு ஒன்று இலங்கைக்கு அவசியமா என்பதாகும். இன்று நாம் எதிர்பார்ப்பது மனிதஉரிமையினை பாதுகாப்பது சர்வதேச வேலைத்திட்டத்தின் அவசியத்தன்மையினைப்பற்றி இலங்கையரசு வேறுதரப்பினர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் சர்வதேச சமூகம் அதுதொடர்பில் கொண்டுள்ள கருத்துக்கள் என்பவற்றைப்பற்றி வாதமொன்றினை ஏற்படுத்தலாகும்.

மனிதஉரிமையினை பாதுகாப்பதற்கு சர்வதேச ரீதியான அவதானிப்பு இலங்கைக்கு அவசியமா?


மனிதஉரிமையினைப் பாதுகாப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு நிலையமொன்றும் புலக் காரியாலயமும் இலங்கையினுள் நிறுவுதல் அவசியமென்று ஏன் கூறுகின்றீர்கள்?

இது சம்பந்தமாக முயற்சியுள்ள தேசிய மற்றும் சர்வதேச நபர்கள் நிறுவனங்கள் நீண்டகாலமாக கூறுவது என்னவென்றால் இலங்கையில் மனிதஉரிமை தொடர்பான பாரதூரமான நிலை காரணமாக சர்வதேச அவதானிப்பு மையமொன்று அவசியமென்று எழுந்துள்ளது என்று கூறுகின்றனர் குறிப்பாக மனிதஉரிமை பாதிக்கப்படும் அளவும் தன்மையும் மனிதஉரிமை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய நிறுவனங்களில் திறமை ரீதியான மட்டுப்பாடுகள் யுத்தப்பிரதேசங்களிலிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கிருக்கும் தேவைப்பாடுகள் என்பவற்றை நோக்குமிடத்து அவ்வாறான ஒரு நிறுவனம் அவசியமாகின்றது. குற்றஞ் செய்பவர்கள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாகாது நீண்டகாலமாக தண்டனைகள் எதுவுமின்றி இருப்பதும் அரச நிறுவனங்களைப்போன்று எல்.ரி.ரி.ஈயினாலும் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பவர்களுக்கேற்படும் அச்சுறுத்தல்கள் மேலோங்கிவருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு கண்காணிப்பு நிறுவனத்தின் அவசியப்பாடு நன்கு புலப்படுகின்றது.

லூயிஸ் ஆபர் கூறிவை…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று ஒக்டோபர் 9-12ஆம் திகதிவரை இலங்கையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட எனக்கு அரச தரப்பினர்களையும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் போறோருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட சந்தர்ப்பங் கிடைத்ததையிட்டு முதலில் நன்றி கூறுகின்றேன். (யுத்தம் இடம்பெறும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசம்). இருப்பினும் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை சந்திக்கக் கிடைக்காததை உள்ளிட்டு நான் மிகவும் வேதனையடைகின்றேன். காரணம் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் சிறுவர்களை அவர்களது படையில் இணைத்தல், பொது மக்களைக் கடத்துதல், அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் உட்பட எல்.ரி.ரி.ஈயினரினால் செய்யப்படும் பாரதூரமான மனிதஉரிமைகளும், மனிதஉரிமை சட்டங்களை மீறுதல் தொடர்பிலும் அவர்களது கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரக்கூடியதாக இருந்திருக்கும்.

Read more ..............