Wednesday, October 8, 2008

மனிதஉரிமையினை பாதுகாப்பதற்கு சர்வதேச ரீதியான அவதானிப்பு இலங்கைக்கு அவசியமா?


மனிதஉரிமையினைப் பாதுகாப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு நிலையமொன்றும் புலக் காரியாலயமும் இலங்கையினுள் நிறுவுதல் அவசியமென்று ஏன் கூறுகின்றீர்கள்?

இது சம்பந்தமாக முயற்சியுள்ள தேசிய மற்றும் சர்வதேச நபர்கள் நிறுவனங்கள் நீண்டகாலமாக கூறுவது என்னவென்றால் இலங்கையில் மனிதஉரிமை தொடர்பான பாரதூரமான நிலை காரணமாக சர்வதேச அவதானிப்பு மையமொன்று அவசியமென்று எழுந்துள்ளது என்று கூறுகின்றனர் குறிப்பாக மனிதஉரிமை பாதிக்கப்படும் அளவும் தன்மையும் மனிதஉரிமை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய நிறுவனங்களில் திறமை ரீதியான மட்டுப்பாடுகள் யுத்தப்பிரதேசங்களிலிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கிருக்கும் தேவைப்பாடுகள் என்பவற்றை நோக்குமிடத்து அவ்வாறான ஒரு நிறுவனம் அவசியமாகின்றது. குற்றஞ் செய்பவர்கள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாகாது நீண்டகாலமாக தண்டனைகள் எதுவுமின்றி இருப்பதும் அரச நிறுவனங்களைப்போன்று எல்.ரி.ரி.ஈயினாலும் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பவர்களுக்கேற்படும் அச்சுறுத்தல்கள் மேலோங்கிவருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு கண்காணிப்பு நிறுவனத்தின் அவசியப்பாடு நன்கு புலப்படுகின்றது.

No comments: