Wednesday, October 8, 2008

டேய் நாங்களும் மனிதர்கள்தான்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது அவரது பிரதான கொள்ளை அடிமைத்தனத்தை ஒழிப்பதாகும். இலிங்கனின் எதிர்த்தரப்பு நீதியரசராக இருந்தவர் டக்லஸ் என்பவராவார். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக செயற்பட்ட இலிங்கனின் கருத்துக்கு இவர் எதிர்ப்பாக இருந்தார்.

அடிமைத்தனத்தின் பௌதீக தோற்றம்

எண்ணக்கருஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களுள் பலர் அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்த விவசாய நிலங்களில் வேலைசெய்வதற்காக விவசாயிகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்வதென்பது கிழக்கமெரிக்காவின் பாரிய விவசாய நிலங்கள் அதன் வாழ்வாதாரங்களை இழப்பதென்பதாகும். இதற்கப்பால் அம்மக்கள் சுதந்திரக்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டதுடன் கிழக்குப்பிராந்தியத்தில் பொதுமக்களின் தராதரத்தில் மாற்றத்திற்குக் காரணமாக இருந்த விடயமென்னவெனில் சுதந்திர ஆபிரிக்காவின் அமெரிக்கர்களின் எண்ணிக்கையிலேற்பட்ட வளர்ச்சியாகும். இது அடிமைத்தனத்தினை மேலும் மேலோங்கச்செய்தது.

No comments: